கிரேக் ரைட் எழுதிய "தி ஹிடன் ஹாபிட்ஸ் ஆஃப் ஜீனியஸ்" புத்தகத்தில் இருந்து 10 பாடங்கள் விதிவிலக்கான படைப்பாற்றல் மற்றும் மேதைக்கு பங்களிக்கும் பண்புகள் மற்றும் நடத்தைகளை ஆராய்கிறது.

Image
   1. ஆர்வம் மற்றும் வாழ்நாள் முழுவதும் கற்றல்:  மேதைகள் இயல்பாகவே ஆர்வமுள்ளவர்களாகவும், தங்கள் வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொள்வதில் உறுதியாகவும் உள்ளனர். அவர்கள் தொடர்ந்து புதிய அறிவையும் அனுபவங்களையும் தேடுகிறார்கள்.  2. தோல்வியைத் தழுவுங்கள்:  தோல்வி என்பது படைப்புச் செயல்பாட்டின் ஒரு முக்கிய பகுதியாகும். மேதைகள் தோல்விக்கு பயப்பட மாட்டார்கள் மற்றும் தவறுகளை வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளாகக் கருதுகின்றனர்.  3. இடைநிலை சிந்தனை:  பல மேதைகள் பல துறைகளில் சிறந்து விளங்குகின்றனர் அல்லது பல்வேறு துறைகளில் இருந்து உத்வேகம் பெறுகின்றனர். இந்த பரந்த கண்ணோட்டம் அவர்களை தனிப்பட்ட இணைப்புகளை உருவாக்கவும் புதுமைப்படுத்தவும் அனுமதிக்கிறது.  4. விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பு:  இயற்கையான திறமை முக்கியமானது, ஆனால் விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பு முக்கியமானது. மேதைகள் பெரும்பாலும் எண்ணற்ற மணிநேரங்களை தங்கள் கைவினைகளை மேம்படுத்துவதற்கும் எல்லைகளைத் தள்ளுவதற்கும் அர்ப்பணிக்கிறார்கள்.   5. தனித்துவமான கண்ணோட்டம்:  மேதைகள் உலகை வித்தியாசமாகப் பார்க்கிறார்கள். அவர்கள் வழக்கமான ஞானத

முயற்சியை நிறுத்தாதே - இரண்டு தவளைகள்



அது ஒரு கோடை காலம் ,அதனால காட்டுல இருக்குற தண்ணி குட்டைகள் எல்லாம் வறண்டு போய்டுச்சு.
அதனால அங்க இருக்குற தவளைகள் எல்லாம் நல்ல தண்ணி இருக்குற குளத்தை தேடி ரொம்ப தூரம் நடந்து போச்சுங்க.
அப்படி போகுறப்ப ரெண்டு தவளைகள் மட்டும் ஒரு பெரிய குழிக்குள்ள விழுந்துடுச்சுங்க.
அந்த குழி ரொம்ப இருட்டாவும் ரொம்ப ஆழமாவும் இருந்துச்சு ,அதனால் ரெண்டு தவளைகளும் ரொம்ப பயந்து போச்சுங்க.
ரெண்டு தவளைகளும் வெளிய வர எம்பி எம்பி குதிச்சு பாத்துச்சுங்க, ஆனா அந்த குழி ரொம்பா ஆழமா இருந்ததால அதுங்கனால வெளிய வர முடியல.
வெளிய இருந்த தவளைகளோட நண்பர்கள் கூட அதுங்களுக்கு எந்த ஒரு உதவியும் வெய்ய முடியல.
அதுல ஒரு தவளை ரொம்ப தாழ்வு மனப்பான்மை கொண்டதா இருந்துச்சு, அதனால தன்னோட வாழ்வு இதோட முடிஞ்சுச்சுனு நினைச்சது, என்னால முடியாது இந்த குழி தான் எனக்கு மரண குழினு புலம்பி அங்கேயே செத்துப்போச்சு.
ஆனா இன்னொரு தவளை ரொம்ப தன்னம்பிக்கை கொண்டதா இருந்துச்சு ,அதனால தொடர்ந்து வெளியில வர குதிச்சி குதிச்சு முயற்சி செஞ்சிகிட்டே இருந்துச்சு.
ஒவ்வொரு தடவை குதிக்கிறப்பவும் தன்னோட உயரம் கூடுனத உணர்ந்த அந்த தவளையோட தன்னம்பிக்கை உயர்ந்துக்கிட்டே போச்சு ,ஒரு தடவ ரொம்ப முயற்சி பண்ணி அது குதிக்கிறப்ப அது அந்த குழியை விட்டே வெளிய வந்து விழுந்துச்சு

தன்னம்பிக்கை உடையவங்களுக்கு ஊக்கமும் பலமும் வந்து சேரும்னு இந்த கதை மூலமா நாம புரிஞ்சிக்கிடலாம்

எந்த ஒரு சூழ்நிலையிலயும் தாழ்வு மனப்பான்மைய மட்டும் நாம வளர விடவே கூடாது ,அதுக்கு சிறந்த மருந்து எப்பவும் தன்னம்பிக்கயோட இருக்குறது.

Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்