கிரேக் ரைட் எழுதிய "தி ஹிடன் ஹாபிட்ஸ் ஆஃப் ஜீனியஸ்" புத்தகத்தில் இருந்து 10 பாடங்கள் விதிவிலக்கான படைப்பாற்றல் மற்றும் மேதைக்கு பங்களிக்கும் பண்புகள் மற்றும் நடத்தைகளை ஆராய்கிறது.

Image
   1. ஆர்வம் மற்றும் வாழ்நாள் முழுவதும் கற்றல்:  மேதைகள் இயல்பாகவே ஆர்வமுள்ளவர்களாகவும், தங்கள் வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொள்வதில் உறுதியாகவும் உள்ளனர். அவர்கள் தொடர்ந்து புதிய அறிவையும் அனுபவங்களையும் தேடுகிறார்கள்.  2. தோல்வியைத் தழுவுங்கள்:  தோல்வி என்பது படைப்புச் செயல்பாட்டின் ஒரு முக்கிய பகுதியாகும். மேதைகள் தோல்விக்கு பயப்பட மாட்டார்கள் மற்றும் தவறுகளை வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளாகக் கருதுகின்றனர்.  3. இடைநிலை சிந்தனை:  பல மேதைகள் பல துறைகளில் சிறந்து விளங்குகின்றனர் அல்லது பல்வேறு துறைகளில் இருந்து உத்வேகம் பெறுகின்றனர். இந்த பரந்த கண்ணோட்டம் அவர்களை தனிப்பட்ட இணைப்புகளை உருவாக்கவும் புதுமைப்படுத்தவும் அனுமதிக்கிறது.  4. விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பு:  இயற்கையான திறமை முக்கியமானது, ஆனால் விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பு முக்கியமானது. மேதைகள் பெரும்பாலும் எண்ணற்ற மணிநேரங்களை தங்கள் கைவினைகளை மேம்படுத்துவதற்கும் எல்லைகளைத் தள்ளுவதற்கும் அர்ப்பணிக்கிறார்கள்.   5. தனித்துவமான கண்ணோட்டம்:  மேதைகள் உலகை வித்தியாசமாகப் பார்க்கிறார்கள். அவர்கள் வழக்கமான ஞானத

எந்த விரல் முக்கியம்?



ஒரு நாள், கையில் உள்ள ஐந்து விரல்களுக்குள் எந்த விரல் முக்கியமானது என்ற பிரச்சினை உண்டாயிற்று.

கட்டை விரல், “நான் தான் முக்கியம், என் உதவி எல்லோருக்கும் தேவை” என்று பெருமையுடன் கூறியது.

அடுத்த விரல், “என்னைக் கொண்டே எல்லோரும் சுட்டிக் காட்டுவதால், எனக்கு ஆள்கட்டி விரல் என்று பெருமை உண்டு” என்று கூறியது.

நடுவிரலுக்கு மிகவும் கோபம், “எல்லோரையும் விட நானே உயரமானவன்” என்று இறுமாப்புடன் கூறியது.

நான்காவது விரல் அமைதியாக, “உங்களில் எவருக்கும் இல்லாத பெருமை எனக்கு மட்டுமே உண்டு. தங்க மோதிரத்தையோ வைரமோதிரத்தையோ என்மீது போடுவதால், மோதிர விரல்” என்ற மதிப்பு எனக்கே உண்டு” என்று அமைதியாகக் கூறியது. ஐந்தாவது விரலான கண்டு விரல், “வணக்கம் என்று சொல்லி ஒருவரை வணங்கினாலும், அல்லது கடவுளை வணங்கினாலும், எப்போதும் நான்தான் முதலில் நிற்கிறேன். நீங்கள் நால்வரும் எனக்குப் பின்னே அல்லவா நிற்கிறீர்கள்?” என்று கூறியது.

பிரச்சினை முடிவாகவில்லை.

அப்பொழுது, ஒருவன், லட்டு லட்டு என்று கூறிக் கொண்டிருந்தான்.

எல்லா விரல்களும் ஒன்று சேர்ந்து அவனிடம் லட்டை வாங்கிக் கொண்டன.

இப்பொழுது எந்த விரல் முக்கியமானது?

Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்