கிரேக் ரைட் எழுதிய "தி ஹிடன் ஹாபிட்ஸ் ஆஃப் ஜீனியஸ்" புத்தகத்தில் இருந்து 10 பாடங்கள் விதிவிலக்கான படைப்பாற்றல் மற்றும் மேதைக்கு பங்களிக்கும் பண்புகள் மற்றும் நடத்தைகளை ஆராய்கிறது.

Image
   1. ஆர்வம் மற்றும் வாழ்நாள் முழுவதும் கற்றல்:  மேதைகள் இயல்பாகவே ஆர்வமுள்ளவர்களாகவும், தங்கள் வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொள்வதில் உறுதியாகவும் உள்ளனர். அவர்கள் தொடர்ந்து புதிய அறிவையும் அனுபவங்களையும் தேடுகிறார்கள்.  2. தோல்வியைத் தழுவுங்கள்:  தோல்வி என்பது படைப்புச் செயல்பாட்டின் ஒரு முக்கிய பகுதியாகும். மேதைகள் தோல்விக்கு பயப்பட மாட்டார்கள் மற்றும் தவறுகளை வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளாகக் கருதுகின்றனர்.  3. இடைநிலை சிந்தனை:  பல மேதைகள் பல துறைகளில் சிறந்து விளங்குகின்றனர் அல்லது பல்வேறு துறைகளில் இருந்து உத்வேகம் பெறுகின்றனர். இந்த பரந்த கண்ணோட்டம் அவர்களை தனிப்பட்ட இணைப்புகளை உருவாக்கவும் புதுமைப்படுத்தவும் அனுமதிக்கிறது.  4. விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பு:  இயற்கையான திறமை முக்கியமானது, ஆனால் விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பு முக்கியமானது. மேதைகள் பெரும்பாலும் எண்ணற்ற மணிநேரங்களை தங்கள் கைவினைகளை மேம்படுத்துவதற்கும் எல்லைகளைத் தள்ளுவதற்கும் அர்ப்பணிக்கிறார்கள்.   5. தனித்துவமான கண்ணோட்டம்:  மேதைகள் உலகை வித்தியாசமாகப் பார்க்கிறார்கள். அவர்கள் வழக்கமான ஞானத

ஒற்றுமையே பலம்



ஒரு ஊருல ஒரு விவசாயி இருந்தாரு ,அவருக்கு மூணு மகன்கள் இருந்தாங்க.

அவுங்க மூணுபேரும் எப்பவும் சண்ட போட்டுக்கிட்டே இருப்பாங்க ,சண்ட போட்டுட்டு ஒருத்தரும் விவசாய வேலை செய்யாம நேரத்த வேஸ்ட் பண்ணிகிட்டே இருப்பாங்க.

அதனால அந்த விவசாயிக்கு ரொம்ப கவலையா இருந்துச்சு, தன்னோட மகன்களை எப்படி திருத்தணும்னு யோசிச்சுகிட்டே இருந்த அவருக்கு ஒரு யோசனை வந்துச்சு.

ஒருநாள் அந்த பயலுகள கூப்பிட்டாரு அந்த விவசாயி,நான் இன்னைக்கு ரெண்டு போட்டி வைக்க போறேன் ,ஜெயிக்கிறவங்களுக்கு என்னோட எல்லா சொத்தையும் கொடுப்பேன்னு சொன்னாரு.

உடனே அந்த மூணு மகன்களுக்கும் மூணு கரும்பு கட்டுகள கொடுத்து ,இத எல்லாம் பிரிச்சி ஓடைங்க இதுதான் முதல் போட்டின்னு சொன்னாரு.

உடனே அந்த மூணு மகன்களும் அந்த கட்ட பிரிச்சி ,ஒவ்வொரு கரும்பா எடுத்து ஈஸியா எல்லா கரும்பையும் ஒடச்சிட்டாங்க.

இத பார்த்த அந்த விவசாயி சிரிச்சிகிட்டே , அதே மாதிரி திரும்பவும் மூணு கரும்பு கட்ட அவுங்ககிட்ட கொடுத்து ,இப்ப இந்த கட்ட பிரிக்காம எல்லா கரும்பையும் ஒரே நேரத்துல ஒடைக்கணும் இதுதான் ரெண்டாவது போட்டின்னு சொன்னாரு.

ஆனா இந்த தடவ எவ்வளவு முயற்சி செஞ்சும் அவுங்களால அந்த முழு கரும்பு கட்ட உடைக்க முடியலை.

அப்பத்தான் அந்த விவசாயி சொன்னாரு ,நீங்களும் இந்த கரும்புகள் போலத்தான் ,தனி தனியா இருந்தா உங்களை ஈஸியா ஒடைச்சுடுவாங்க.

அதே நேரத்துல ஒற்றுமையை இருந்தீங்கன்னா உங்களை யாராலயும் எதுவும் செய்ய முடியாதுனு சொன்னாரு.

இத கேட்ட அந்த மூணு பேருக்கும் அப்பத்தான் உண்மை புரிஞ்சுச்சு ,இத்தனை நாள் மூணு பேரும் தங்களுக்குள்ள சண்டை போட்டதை நினைச்சு ரொம்ப வருத்தப்பட்டாங்க.

அன்னைல இருந்து அவுங்க மூணுபேரும் ஒண்ணாவே விவசாயம் செஞ்சாங்க ,நிறய உழைப்பை அவுங்க கொடுத்ததால கொஞ்ச நாள்லயே பணக்காரங்களா மாறிட்டாங்க அந்த அண்ணன் தம்பிகள் மூணு பேரும்.


Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்