கிரேக் ரைட் எழுதிய "தி ஹிடன் ஹாபிட்ஸ் ஆஃப் ஜீனியஸ்" புத்தகத்தில் இருந்து 10 பாடங்கள் விதிவிலக்கான படைப்பாற்றல் மற்றும் மேதைக்கு பங்களிக்கும் பண்புகள் மற்றும் நடத்தைகளை ஆராய்கிறது.

Image
   1. ஆர்வம் மற்றும் வாழ்நாள் முழுவதும் கற்றல்:  மேதைகள் இயல்பாகவே ஆர்வமுள்ளவர்களாகவும், தங்கள் வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொள்வதில் உறுதியாகவும் உள்ளனர். அவர்கள் தொடர்ந்து புதிய அறிவையும் அனுபவங்களையும் தேடுகிறார்கள்.  2. தோல்வியைத் தழுவுங்கள்:  தோல்வி என்பது படைப்புச் செயல்பாட்டின் ஒரு முக்கிய பகுதியாகும். மேதைகள் தோல்விக்கு பயப்பட மாட்டார்கள் மற்றும் தவறுகளை வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளாகக் கருதுகின்றனர்.  3. இடைநிலை சிந்தனை:  பல மேதைகள் பல துறைகளில் சிறந்து விளங்குகின்றனர் அல்லது பல்வேறு துறைகளில் இருந்து உத்வேகம் பெறுகின்றனர். இந்த பரந்த கண்ணோட்டம் அவர்களை தனிப்பட்ட இணைப்புகளை உருவாக்கவும் புதுமைப்படுத்தவும் அனுமதிக்கிறது.  4. விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பு:  இயற்கையான திறமை முக்கியமானது, ஆனால் விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பு முக்கியமானது. மேதைகள் பெரும்பாலும் எண்ணற்ற மணிநேரங்களை தங்கள் கைவினைகளை மேம்படுத்துவதற்கும் எல்லைகளைத் தள்ளுவதற்கும் அர்ப்பணிக்கிறார்கள்.   5. தனித்துவமான கண்ணோட்டம்:  மேதைகள் உலகை வித்தியாசமாகப் பார்க்கிறார்கள். அவர்கள் வழக்கமான ஞானத

முயற்சி செய்யாமை

ஒரு அரசன் இருந்தான் அவன் ஒரு போட்டி ஒன்றை அறிவித்தான். கோட்டை கதவை எந்த உதவியும் இல்லாமல் வேறும் கைகளால் திறக்க வேண்டும்.

அப்பிடி திறக்க தவறினால் அவன் இரு கைகள் வெட்டப்படும். வென்றால் அவனுக்கு நாட்டின் ஒரு பகுதி பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்தார்.

இதை கேட்ட மக்கள் பலவாறு யோசித்து, பயந்து யாரும் போட்டியில் கலந்து கொள்ளவில்லை.

ஒரே ஒரு இளைஞன் மட்டும் போட்டியில் கலந்து கொள்ள முன் வந்தான். இவனுக்கு என்ன பைத்தியமா அந்த கோட்டை கதவு மலையைவிட  வலுவானது அதை எப்படி திறக்க போகிறான்.

தோற்றால் உன்னுடைய கைகள் வெட்டப்படும். உன் எதிர்காலம் என்னவாகும்? என்றார்கள்.

ஐயா, தோற்றால் கைகள் போகும் உயிரில்லையே வென்றால் ஒரு நாட்டுக்கு நான் அரசன் என்று கூறி கோட்டை கதவை தள்ளினான் என்ன அதிசியம்! கதவு சாட்டெனத் திறந்து கொண்டது.

ஏனென்றால், கோட்டை கதவு தாழ்ப்பாள் போடவில்லை திறந்து தான் இருந்தது. பல பேர் இப்படி தான் இருக்கிறார்கள்.

தன்னால் முடியாது, அது தேவையில்ல வேலை, எதையாவது இழந்து விடுவோமோ, தோற்று விடுவோமோ என பலவாறு நினைத்து வாழ்க்கையில் முன்னேற தவறி விடுகிறார்கள்.


Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்